Wednesday, August 23, 2023
வரலாற்றில் இன்று...
ஆகஸ்ட்.23:
இன்று எழுத்தாளர் வ.ராமசாமி நினைவு தினம்!
👉தமிழ் எழுத்தாளர், இதழியலாளர் வ.ராமசாமி 1889-ம் ஆண்டு தஞ்சாவூரின் திருப்பழனத்தில் பிறந்தார்.
👉அறிஞர் அண்ணா தனது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவை "அக்கிரகாரத்து அதிசய மனிதர்" என்று வர்ணித்தார்.
👉தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கைம்பெண் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களாக எழுதினார்.
👉1914-ல்தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார்.
👉பிறகு பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றினார்.
👉இவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது.
👉கல்கி, புதுமைப்பித்தன் போன்ற இளம் எழுத்தாளர்களை இப்பத்திரிக்கை மூலம் ஊக்குவித்தார்.
👉1930-ம்ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக 6 மாதம் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
👉சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார்.
👉அவை தொகுக்கப்பட்டு பின்னாளில் "ஜெயில் டயரி" என்ற பெயரில் நூலாக வெளி வந்தது.
👉சிறந்த எழுத்தாளரான இவர் 1951 ஆகஸ்ட் 23-ம் தேதி காலமானார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
60 DAYS STUDY PLAN FOR TNPSC GROUP 2 & 2A EXAM DAY - 1 பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் TEST -1 ஐ எழுதி பயிற்சி செய்ய CL...
-
TNUSRB & PC 2024 தேர்விற்க்கான மாதிரித் தேர்வு எழுத CLICK HERE (எட்டாம் வகுப்பு தமிழ் முழுவதும்)

No comments:
Post a Comment